உயர்தரப் பரீட்சை தொடர்பில் முக்கிய அறிவிப்பு
கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சை நடைபெறும் திகதிகள் தொடர்பில் இதுவரை இறுதித் தீர்மானம் எடுக்கப்படவில்லை என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சை நடைபெறும் திகதிகள் தொடர்பில் இதுவரை இறுதித் தீர்மானம் எடுக்கப்படவில்லை என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
இது தொடர்பான இறுதித் தீர்மானம் எதிர்வரும் திங்கட்கிழமைக்குள் அறிவிக்கப்படும் என அமைச்சின் செயலாளர் நிஹால் ரணசிங்க கூறியுள்ளார்.
உயர்தரப் பரீட்சைக்கு தற்போது திட்டமிடப்பட்டுள்ள திகதிகள் திருத்தப்பட்டு பின்னர் அறிவிக்கப்படும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேம்ஜயந்த கடந்த 21ஆம் திகதி பாராளுமன்றத்தில் குறிப்பிட்டிருந்தார்.