ஊற்றெடுக்கும் அருவிகள் கண்காட்சி
இந்தக் கண்காட்சியை ஏற்பாடு செய்த தாறுஸ்ஸலாம் ஆரம்ப பாடசாலையின் அதிபர், ஆசிரியர்கள் SDEC மற்றும் பங்குபற்றிய பாடசாலைகளின் அதிபர்கள் மற்றும் ஆசிரியர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் பாராட்டுக்கள் உரித்தாகட்டும்

ஊற்றெடுக்கும் அருவிகள் கண்காட்சி, திஹாறிய தாறுஸ்ஸலாம் ஆரம்ப பாடசாலையில் செப்டெம்பர் மாதம் 25ஆம் மற்றும் 26ஆம் திகதிகள் நடைபெற்றது.
இந்தக் கண்காட்சியில் திஹாறிய தாறுஸ்ஸலாம் ஆரம்ப பாடசாலை, கஹடோவிட அல் பத்ரிய மகா வித்தியாலயம், கஹடோவிட முஸ்லிம் மகளிர் மகா வித்தியாலயம், ஹொரகொல்ல ஒச்சட்வத்த மகா வித்தியாலயம், உடுகொட அறபா மகா வித்தியாலயம், திஹாறிய இஸ்லாமிய விசேட தேவையுடைய நிலையம் மற்றும் பூகொட குமாரிமுல்லை மகா வித்தியாலயம் ஆகிய ஆரம்ப பாடசாலைகளின் மாணவர்கள் கலந்துகொண்டு, அவர்களின் திறமைகளை வெளிப்படுத்தக்கூடிய ரீதியில் ஆக்கங்களை காட்சிப்படுத்தினர்.
இந்தக் கண்காட்சியை ஏற்பாடு செய்த தாறுஸ்ஸலாம் ஆரம்ப பாடசாலையின் அதிபர், ஆசிரியர்கள் SDEC மற்றும் பங்குபற்றிய பாடசாலைகளின் அதிபர்கள் மற்றும் ஆசிரியர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் பாராட்டுக்கள் உரித்தாகட்டும். (ஹஸ்பர்)