மீன் மற்றும் மரக்கறி விலையில் சடுதியாக ஏற்பட்டுள்ள மாற்றம்
தொடர்ந்து அதிகரித்து வந்த மீன்களின் விலை தற்போது சடுதியாக குறைவடைந்துள்ளது.

தொடர்ந்து அதிகரித்து வந்த மீன்களின் விலை தற்போது சடுதியாக குறைவடைந்துள்ளது.
தற்போது அதிகளவு மீன் கிடைப்பதால் மீன்களின் விலை குறைவடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சில வகை மீன்களின் விலை 50 வீதத்தால் குறைந்துள்ளதாக பேலியகொட சந்தையின் வர்த்தக சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை, சந்தையில் தற்போது மரக்கறிகளின் விலைகள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கனமழை காரணமாக விலை உயர்வடைந்துள்ளதாக மனிங் பொது வர்த்தக சங்கத்தின் தலைவர் எச்.எம்.உபாசேன தெரிவித்துள்ளார்.