மரத்திலிருந்து விழுந்து நான்கு பிள்ளைகளின் தந்தை மரணம்

தென்னை மரத்திலிருந்து விழுந்து, நான்கு பிள்ளைகளின் தந்தை ஒருவர் உயிரிழந்துள்ளார்.

ஒக்டோபர் 11, 2023 - 11:27
மரத்திலிருந்து விழுந்து நான்கு பிள்ளைகளின் தந்தை மரணம்

தென்னை மரத்திலிருந்து விழுந்து, நான்கு பிள்ளைகளின் தந்தை ஒருவர் உயிரிழந்துள்ளார்.

புத்தூர் கிழக்கு, புத்தூர் பகுதியைச் சேர்ந்த பொன்னுத்துரை கணேசலிங்கம் (வயது 65) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

குறித்த நபர் கடந்த 6ஆம் திகதி, தென்னையில் சீவல் தொழில் செய்வதற்காக ஏறிய நிலையில் கீழே விழுந்ததுள்ளார்.

இந்நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

பிரேத பரிசோதனைகளின் பின்னர் அவரது சடலம் நேற்று உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
புதிய செயலாளராக எம்.டபிள்யூ.ஜகத் குமார பதவியேற்பு

Listen Live on Aha FM Your Favorite Online Tamil Radio!