பல மாகாணங்களில் பலத்த மழை – மின்னல் மற்றும் காற்று தொடர்பில் எச்சரிக்கை
இலங்கையின் பல பகுதிகளில் இன்று (ஏப்ரல் 9) ஓரளவு பலத்த மழை பெய்யக்கூடும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இலங்கையின் பல பகுதிகளில் இன்று (ஏப்ரல் 9) ஓரளவு பலத்த மழை பெய்யக்கூடும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
தென் மாகாணத்தில் நாள் முழுவதும் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.
தெற்கைத் தவிர, நாடு முழுவதும் உள்ள பிற பகுதிகளிலும் பிற்பகல் அல்லது இரவு நேரங்களில் மழை பெய்யக்கூடும். சப்ரகமுவ, தென், மத்திய, ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்களில் அண்ணளவாக 75 மில்லிமீற்றர் வரையில் ஓரளவு பலத்த மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
இதேவேளை, மேல் மாகாணம் மற்றும் புத்தளம் மாவட்டத்தின் கரையோரப் பிரதேசங்களிலும் காலை வேளையில் மழை பெய்யக்கூடும். சப்ரகமுவ, மத்திய, ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்களில் அதிகாலை நேரங்களில் பனிமூட்டமான நிலை எதிர்பார்க்கப்படுகிறது.
இடியுடன் கூடிய மழையின் போது தற்காலிகமாக பலத்த காற்று மற்றும் மின்னலினால் ஏற்படும் அபாயங்களைக் குறைப்பதற்கு தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு மக்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
இதேவேளை, ஏப்ரல் 5 ஆம் திகதி முதல் ஏப்ரல் 14 ஆம் திகதி வரை இலங்கையின் பல்வேறு இடங்களுக்கு நேரடியாக சூரியன் வடக்கு நோக்கி நகர்கின்றது.
ஏப்ரல் 9 ஆம் திகதி உயங்கல்ல, அரங்கல, கொங்கஹவெல, மொரகஹகந்த மற்றும் மட்டக்களப்பு உள்ளிட்ட பகுதிகளுக்கு மதியம் 12:12 மணியளவில் சூரியன் நேரடியாக இருக்கும்.