தேர்தல் பிரசாரங்களுக்கு தேசியக்கொடியை பயன்படுத்த வேண்டாம்
இது தொடருமானால் இன்னும் சில நாட்களில் தேசிய கீதம் கட்சியின் பாடலாக மாறும் எனவும் அவர் தெரிவித்தார்.

தேர்தல் பிரசாரங்களுக்கு தேசியக்கொடியை பயன்படுத்தினால் சட்டம் அமுல்படுத்தப்படும் என தேர்தல் ஆணையாளர் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்தார்.
இது தொடருமானால் இன்னும் சில நாட்களில் தேசிய கீதம் கட்சியின் பாடலாக மாறும் எனவும் அவர் தெரிவித்தார்.
ஜனாதிபதித் தேர்தலை முன்னிட்டு பெப்ரல் அமைப்பின் அனுசரணையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், “தேசியக்கொடியின் பெருமை இன்று பள்ளத்துக்கு போய்விட்டது. தேர்தல் பிரசாரங்களுக்கு தேசியக் கொடியை பயன்படுத்த வேண்டாம். தேசியக்கொடியை சுற்றிக் கொண்டு, கையில் மது பாட்டிலை வைத்துக் கொண்டு நடனமாடுவது, அரசியல் தத்துவம் இல்லை” என்றார்.