மக்களுக்கு வழங்கப்பட்டுள்ள முக்கிய அறிவிப்பு

இலங்கையில் புதிய கொவிட் அலை குறித்து சுகாதார அமைச்சின் கொவிட் நோய்த் தொற்று குறித்த பிரதான இணைப்பாளர் டொக்டர் அன்வர் ஹம்தானி எச்சரிக்கை வழங்கியுள்ளார்.

ஜனவரி 15, 2023 - 12:58
மக்களுக்கு வழங்கப்பட்டுள்ள முக்கிய அறிவிப்பு

இலங்கையில் புதிய கொவிட் அலை குறித்து சுகாதார அமைச்சின் கொவிட் நோய்த் தொற்று குறித்த பிரதான இணைப்பாளர் டொக்டர் அன்வர் ஹம்தானி எச்சரிக்கை வழங்கியுள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், 

சீனா உள்ளிட்ட சில நாடுகளில் கொவிட் தொற்று தீவிரமாக பரவத் தொடங்கியுள்ளது. கொவிட் காரணமாக இரண்டாண்டுகள் பாதிப்புக்களை எதிர்நோக்கியதனை மக்கள் மறந்து விட்டார்கள்.

ஒரு மீற்றர் இடைவெளி, கை சுத்திகரிப்பான் பயன்டுத்தல், அடிக்கடி கை கழுவுதல், முகக்கவசம் அணிதல் உள்ளிட்ட சுகாதார பழக்க வழக்கங்களை பலர் மறந்து விட்டார்கள்.

சுகாதார பழக்க வழக்கங்களை கைவிடுவதனால் மீளவும் நோய்த் தொற்று பரவும் அபாயம் காணப்படுகிறது என எச்சரித்துள்ளார்.

Listen Live on Aha FM Your Favorite Online Tamil Radio!