முட்டை இறக்குமதிக்கு அதிரடியாக அமைச்சரவை அனுமதி

உள்நாட்டு சந்தையில் முட்டையின் விலையை குறைக்கும் நோக்கத்தில் முட்டைகளை இறக்குமதி செய்வதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
முட்டை இறக்குமதிக்கு அதிரடியாக அமைச்சரவை அனுமதி
- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -

உள்நாட்டு சந்தையில் முட்டையின் விலையை குறைக்கும் நோக்கத்தில் முட்டைகளை இறக்குமதி செய்வதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -

இதனடிப்படையில், எதிர்வரும் பண்டிகைக் காலங்களில் சந்தையில் முட்டை விலையை ஸ்திரப்படுத்தவும் பேக்கரித் தொழிலுக்குத் தேவையான முட்டைகளை வழங்கவும் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -

வர்த்தகம், வணிகம் மற்றும் உணவுப் பாதுகாப்பு அமைச்சர் முன்வைத்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

அத்தோடு,  2024-03-18 திகதியிட்ட அமைச்சரவை தீர்மானத்தின் படி இலங்கை அரச வர்த்தக (பொது) கூட்டுத்தாபனம் இதுவரை 224 மில்லியன் முட்டைகளை இறக்குமதி செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மேலும், அவற்றில் 95% லங்கா சதொசவின் சந்தைப்படுத்தல் வலையமைப்பு மூலம் 37 ரூபாய் என்ற மலிவு விலையில் நுகர்வோருக்கு விநியோகிக்கப்பட்டுள்ளன.

இதனையடுத்து, முட்டைகளை இறக்குமதி செய்வதற்கான கால அவகாசம் 2024-04-30 அன்று முடிவடைந்தமை குறிப்பிடத்தக்கது.

News21
இந்த செய்தி உங்களுக்கு பிடித்திருந்ததா?

News21-ஐ கூகுள் நியூஸில் (Google News) பின்தொடர (Follow) செய்து, உடனுக்குடன் உண்மையான செய்திகளைப் பெறுங்கள்.

சமூக வலைத்தளங்களில் பின்தொடர
- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -