பாடசாலை மாணவர்களை ஏற்றிச் சென்ற பஸ் விபத்து : 24 பேர் காயம்
பாடசாலை மாணவர்களை ஏற்றிச் சென்ற பஸ் ஒன்று சியம்பலாண்டுவ பிரதேசத்தில் கவிழ்ந்ததில் விபத்து ஏற்பட்டுள்ளது.

பாடசாலை மாணவர்களை ஏற்றிச் சென்ற பஸ் ஒன்று சியம்பலாண்டுவ பிரதேசத்தில் கவிழ்ந்ததில் விபத்து ஏற்பட்டுள்ளது.
இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ் ஒன்றே விபத்துக்குள்ளாகியுள்ளது.
இதில் 24 பாடசாலை மாணவர்கள் உட்பட 36 பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.