பட்டாசு ஆலையில் வெடி விபத்து- 3 பேர் உயிரிழப்பு

கர்நாடகா மாநிலம், ஹாவேரியில் உள்ள பட்டாசு குடோனில் நேற்று திடீரென தீ விபத்து ஏற்பட்டது. அப்போது, குடோனில் இருந்த பட்டாசுகள் வெடித்து சிதறின.

ஆகஸ்ட் 30, 2023 - 10:30
பட்டாசு ஆலையில் வெடி விபத்து- 3 பேர் உயிரிழப்பு

கர்நாடகா மாநிலம், ஹாவேரியில் உள்ள பட்டாசு குடோனில் நேற்று திடீரென தீ விபத்து ஏற்பட்டது. அப்போது, குடோனில் இருந்த பட்டாசுகள் வெடித்து சிதறின.

இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு மீட்பு குழுவினர் விரைந்தனர்.

அங்கு தீயணைப்பு வீரர்கள் பெரும் போராட்டத்திற்கு பிறகு தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

இந்நிலையில், இந்த தீ விபத்தில் சிக்கி 3 பேர் உயிரிழந்தனர். அவர்களது சடலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

மேலும் தீ விபத்தில் சுமார் ஒரு கோடி ரூபாய் மதிப்பிலான பட்டாசுகள் எரிந்து சாம்பலானது.

தீ விபத்திற்கான காரணம் குறித்து பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Listen Live on Aha FM Your Favorite Online Tamil Radio!