ரயில் ஊழியர்களின் பிரச்சனையை தீர்க்க மற்றொரு பேச்சு
ரயில் மின்சார தொழில்நுட்ப ஊழியர்களுக்கும் ரயில் பொது முகாமையாளருக்கும் இடையில் இன்று (25) விசேட கலந்துரையாடல் ஒன்று இடம்பெறவுள்ளது.

ரயில் மின்சார தொழில்நுட்ப ஊழியர்களுக்கும் ரயில் பொது முகாமையாளருக்கும் இடையில் இன்று (25) விசேட கலந்துரையாடல் ஒன்று இடம்பெறவுள்ளது.
ரயில்வே கட்டுப்பாட்டாளர் மீது தாக்குதல் நடத்திய சம்பவத்தில் ரயில் மின்சார தொழில்நுட்ப ஊழியர் ஒருவர் கைது செய்யப்பட்டதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் மின்சார தொழில்நுட்ப ஊழியர்கள் குழுவொன்று நேற்று முன்தினம் அவசர தொழில் நடவடிக்கையை ஆரம்பித்திருந்தது.
இதன்காரணமாக கடந்த இரண்டு நாட்களாக அனைத்து ரயில் பாதைகளிலும் ரயில் தாமதம் ஏற்பட்டதாகவும், அங்கு பயணிகள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகியதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.