ஜனாதிபதி வேட்பாளர்களின் தேர்தல் வைப்புத்தொகை குறித்த அறிவிப்பு

2024 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலுக்கான வைப்புத் தொகையை தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

ஜுலை 26, 2024 - 13:08
ஜுலை 26, 2024 - 13:20
ஜனாதிபதி வேட்பாளர்களின் தேர்தல் வைப்புத்தொகை குறித்த அறிவிப்பு

2024 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலுக்கான வைப்புத் தொகையை ஜனாதிபதித் தேர்தல் அறிவிக்கப்பட்ட இன்று (26) காலை 8.30 மணி முதல் தேர்தலுக்கான வேட்புமனுக்கள் கோரப்படுவதற்கு முந்தைய நாளான ஆகஸ்ட் 14 ஆம் திகதி நண்பகல் 12 மணி வரை வைப்புச் செய்ய முடியும் என தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

அதன்படி, அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியால் பரிந்துரைக்கப்படும் வேட்பாளர் 50,000  ரூபாயும் வேறு ஏதேனும் அரசியல் கட்சியால் அல்லது வாக்காளர்களால் பரிந்துரைக்கப்படும் வேட்பாளர் 75,000 ரூபாயும் செலுத்த வேண்டும்.

இதேவேளை, 2024 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலுக்கான திகதி மற்றும் வேட்புமனுக்களை ஏற்றுக்கொள்ளும் திகதியை அறிவிக்கும் வர்த்தமானி அறிவித்தலையும் இலங்கை தேர்தல்கள் ஆணைக்குழு இன்று வெளியிட்டுள்ளது.

இதன்படி, ஜனாதிபதித் தேர்தல் 2024 செப்டெம்பர் 21 ஆம் திகதி நடத்தப்படும் என்றும், வேட்புமனுக்கள் 2024 ஆகஸ்ட் 15 ஆம் திகதி ஏற்றுக்கொள்ளப்படும் என்றும் வர்த்தமானி அறிவித்தலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Listen Live on Aha FM Your Favorite Online Tamil Radio!