ஜனாதிபதி தேர்தலின் பின்னர் ரணில் எடுத்த அதிரடி தீர்மானம்

ஜனாதிபதித் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்ட பின்னர் நடைபெற்ற ஐக்கிய தேசியக் கட்சியின் நிர்வாகக் குழுக் கூட்டத்தில் அவர் இதனைத் கூறி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

செப்டெம்பர் 23, 2024 - 23:34
ஜனாதிபதி தேர்தலின் பின்னர் ரணில் எடுத்த அதிரடி தீர்மானம்

எதிர்வரும் பொதுத் தேர்தலில் யானைச் சின்னத்தில் போட்டியிடத் தயாராக இருக்குமாறு ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க கட்சியின் நிர்வாகக் குழுவுக்கு நேற்று(22) அறிவுறுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஜனாதிபதித் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்ட பின்னர் நடைபெற்ற ஐக்கிய தேசியக் கட்சியின் நிர்வாகக் குழுக் கூட்டத்தில் அவர் இதனைத் கூறி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

அத்துடன், நாடளாவிய ரீதியில் ஒவ்வொரு மாவட்டத்திற்கும் வேட்புமனுத் தயாரிக்கும் போது புதிதாக ஐந்து பேருக்கு வாய்ப்பு வழங்குமாறும் அவர்  இதன் பாது அறிவுறுத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Listen Live on Aha FM Your Favorite Online Tamil Radio!