இன்று பல பகுதிகளில் நீர் விநியோகம் தடை – உங்கள் பகுதி பட்டியலில் உள்ளதா? முழு விவரங்கள் இதோ!
கந்தானை நீர் சுத்திகரிப்பு நிலையத்தில் முன்னெடுக்கப்படவுள்ள அத்தியாவசிய பராமரிப்புப் பணிகள் காரணமாக, இன்று செவ்வாய்க்கிழமை (04) பல பகுதிகளில் திட்டமிட்ட வகையில் நீர் விநியோகம் தற்காலிகமாக இடைநிறுத்தப்படவுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை (NWSDB) அறிவித்துள்ளது.
பராமரிப்புப் பணிகள் தடையின்றி முன்னெடுக்கப்படுவதற்காக பல்வேறு பகுதிகளில் குறிப்பிட்ட நேரங்களுக்கு நீர் விநியோகம் நிறுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மொரட்டுவை – 5 மணி நேரம்
காலை 9.00 மணி முதல் பிற்பகல் 2.00 மணி வரை
நீர் விநியோகம் தடைப்படும் பகுதிகள்:
மொரட்டுவை
கொரலவெல்ல
கட்டுக்குருந்த
மோதர
மாதம்பஹவத்த
பொல்வத்த
ஸ்ரீயா பெதேச
குளோவியஸ் மாவத்தை
குணவர்தனராம வீதி
லேக் வலா
புனித பீட்டர் பிரதேசம்
பி.எம். பெர்னாண்டோ மாவத்தை
பஹவிதான மாவத்தை
ஜனஜய வீதி
புனித பீட்டர் வீதி
பிரான்சிஸ்கோ பெதேச
எகொடஉயன
மெல்வில் வத்த
பாணந்துறை – 5 மணி நேரம்
காலை 9.00 மணி முதல் பிற்பகல் 2.00 மணி வரை
பாதிக்கப்படும் பகுதிகள்:
பாணந்துறை
கிரிபெரிய
ஹிரண
கெஸல்வத்த
பின்னவத்த
பண்டாரகம – 12 மணி நேரம்
காலை 9.00 மணி முதல் இரவு 9.00 மணி வரை
நீர் விநியோகம் நிறுத்தப்படும் பகுதிகள்:
பண்டாரகம
ரைகம
மில்லனிய
வல்மில்ல
கிதெல்பிட்டிய
அலுபோமுல்ல
மொரந்துடுவ
ஹொரணை – 5 மணி நேரம்
பிற்பகல் 4.00 மணி முதல் இரவு 9.00 மணி வரை
பாதிக்கப்படும் பகுதிகள்:
ஹொரணை
மதுராவல
போருவதண்ட
கும்புக்க – 5 மணி நேரம்
பிற்பகல் 4.00 மணி முதல் இரவு 9.00 மணி வரை
நீர் விநியோகம் தடைப்படும் பகுதிகள்:
கும்புக்க
கோனாப்பல
கஹத்துடுவ
கிரிவத்துடுவ
இங்கிரிய – 5 மணி நேரம்
பிற்பகல் 4.00 மணி முதல் இரவு 9.00 மணி வரை
பாதிக்கப்படும் பகுதிகள்:
இங்கிரிய
நம்பபான
பிலியந்தலை – 16 மணி நேரம்
இன்று பிற்பகல் 4.00 மணி முதல் நாளை (05) காலை 8.00 மணி வரை
நீர் விநியோகம் நிறுத்தப்படும் பகுதிகள்:
பிலியந்தலை
வேரஹர
மடபாத்த
ஹொன்னந்தர
கெஸ்பேவ
பொல்கஸ்ஓவிட்ட
கஹபொல
மொரட்டுவை வீதி – கொஸ்பெலன்ன
கங்காராம வீதி
நீலமஹர
தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை, இந்த திட்டமிட்ட நீர் விநியோகத் தடையால் பொதுமக்களுக்கு ஏற்படக்கூடிய அசௌகரியங்களுக்கு வருத்தம் தெரிவித்துள்ளது.
அத்துடன், குறிப்பிட்ட காலப்பகுதியில் குடிநீரை சிக்கனமாகப் பயன்படுத்துமாறும், தேவையான அளவு நீரை முன்கூட்டியே சேமித்து வைத்துக்கொள்ளுமாறும் நுகர்வோரிடம் கேட்டுக்கொண்டுள்ளது.
மேலதிக தகவல்கள் மற்றும் அவசர உதவிகளுக்கு 1939 என்ற தொலைபேசி இலக்கத்தை தொடர்புகொள்ளலாம் என்றும் தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை அறிவித்துள்ளது.