ரணிலுக்கு ஆதரவளிப்பதாக தலதா அத்துகோரள உறுதி
ஐக்கிய மக்கள் சக்தியின் இரத்தினபுரி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த தலதா அத்துகோரள, தனது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை அண்மையில் இராஜினாமா செய்திருந்தார்.
இந்நிலையில், வெலிமடை நகரில் இன்று (08) நடைபெற்று வரும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் அவர் கலந்துகொண்டு, தேர்தலில் தனது ஆதரவை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு தெரிவித்தார்.
"ரணிலால் இயலும்" என்ற தொனிப்பொருளில் சுயேட்சை வேட்பாளர் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு ஆதரவாக வெலிமடை நகரில் மாபெரும் பேரணி நடைபெற்று வருகிறது.
இதையும் படியுங்க : கட்சி பிளவுபட்டதால் எம்.பி பதவியை இராஜினாமா செய்யும் தலதா அத்துகோரள
