கட்டுப்பாட்டு விலையை விட அதிக விலைக்கு அரிசி விற்பனை: பல்பொருள் அங்காடிக்கு ரூ.5 இலட்சம் அபராதம்

அரசாங்கத்தின் அதிகபட்ச சில்லறை விலையான 230 ரூபாய்க்கு பதிலாக, ஒரு கிலோ நாடு அரிசியை 240 ரூபாய்க்கு அந்த அங்காடி விற்பனை செய்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கட்டுப்பாட்டு விலையை விட அதிக விலைக்கு அரிசி விற்பனை: பல்பொருள் அங்காடிக்கு ரூ.5 இலட்சம் அபராதம்
ADVERTISEMENT
ADVERTISEMENT

அரசாங்கத்தால் நிர்ணயிக்கப்பட்ட கட்டுப்பாட்டு விலையை விட அதிக விலைக்கு உள்ளூர் நாடு அரிசியை விற்பனை செய்த கம்பளையிலுள்ள பல்பொருள் அங்காடி ஒன்றுக்கு 5 இலட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

நுகர்வோர் விவகார அதிகாரசபையால் நேற்று முன்தினம் (23) மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போது, இந்த விதிமீறல் கண்டறியப்பட்டது. 

ADVERTISEMENT
ADVERTISEMENT

அரசாங்கத்தின் அதிகபட்ச சில்லறை விலையான 230 ரூபாய்க்கு பதிலாக, ஒரு கிலோ நாடு அரிசியை 240 ரூபாய்க்கு அந்த அங்காடி விற்பனை செய்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பான வழக்கு, கம்பளை நீதவான் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது, குறித்த பல்பொருள் அங்காடி தனது குற்றத்தை ஒப்புக்கொண்டது. 

இதனைத் தொடர்ந்து, நீதிமன்றம் 5 இலட்சம் ரூபாய் அபராதத்தை விதித்து தீர்ப்பளித்தது.

ADVERTISEMENT
ADVERTISEMENT

எங்களின் சமீபத்திய செய்திகள், நிகழ்நேர முக்கிய செய்திகள் உடனுக்குடன் தெரிந்துகொள்ளுங்கள்.

ADVERTISEMENT
ADVERTISEMENT