நள்ளிரவு முதல் பால் தேநீர் விலை அதிகரிப்பு
நேற்று (31) நள்ளிரவு முதல் பால் தேநீர் கோப்பையின் விலை 10 ரூபாயினால் அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
பால் மாவின் விலையை உயர்த்தியமையே பால் தேநீரை அதிகரிக்க காரணம் என அகில இலங்கை சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
இன்று (01) முதல் பால் மா விலையை 4.7 சதவீதத்தால் உயர்த்த பால்மா இறக்குமதியாளர்கள் கடந்த 18ம் திகதி முடிவு செய்தனர்.
இதன்படி, இறக்குமதி செய்யப்படும் 400 கிராம் பால் மா பொதி ஒன்றின் விலை 50 ரூபாயினால் அதிகரிக்கப்படவுள்ளது.
