ஜெரோம் பெர்னாண்டோ சி.ஐ.டியில் ஆஜர்
போதகர் ஜெரோம் பெர்னாண்டோ குற்றப் புலனாய்வு பிரிவுக்கு இன்று (30) முற்பகல் வந்துள்ளார்.
நீதிமன்ற உத்தரவுக்கு அமைய வாக்குமூலம் வழங்குவதற்காக அவர் அங்கு சென்றுள்ளார்.
பௌத்த மதத்தை அவமதிக்கும் வகையில் கருத்து வெளியிட்டதாக போதகர் ஜெரோம் பெர்னாண்டோ மீது குற்றம் சாட்டப்பட்டது.
இதனையடுத்து, வெளிநாட்டுக்கு சென்றிருந்த ஜெரோம் பெர்னாண்டோ நேற்று (29) நாடு திரும்பியமை குறிப்பிடத்தக்கது.
