ஒரே நாளில் இடம்பெற்ற வெவ்வேறு வீதி விபத்துகள்: மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்கள் உட்பட நால்வர் உயிரிழப்பு

வீதியைக் கடந்து சென்ற நாயைத் தவிர்க்க முயன்றபோது, மோட்டார் சைக்கிளின் கட்டுப்பாட்டை இழந்த 59 வயது நபர் விபத்தில் சிக்கி உயிரிழந்தார்.

ஒரே நாளில் இடம்பெற்ற வெவ்வேறு வீதி விபத்துகள்: மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்கள் உட்பட நால்வர் உயிரிழப்பு
ADVERTISEMENT
ADVERTISEMENT

நாட்டின் பல்வேறு பகுதிகளில் நேற்று செவ்வாய்க்கிழமை (28) இடம்பெற்ற வெவ்வேறு வீதி விபத்துகளில், 03 மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்கள் உட்பட நால்வர் உயிரிழந்தனர் என பொலிஸார் தெரிவித்தனர்.

ஹுரிகஸ்வெவ பகுதியில், வீதியைக் கடந்து சென்ற நாய் மீது மோதுவதைத்  தவிர்க்க முயன்றபோது, மோட்டார் சைக்கிளின் கட்டுப்பாட்டை இழந்த 59 வயது நபர் விபத்தில் சிக்கி உயிரிழந்தார்.

ADVERTISEMENT
ADVERTISEMENT

கொடகவெல பகுதியில், 21 வயது இளைஞன் ஓட்டிச் சென்ற மோட்டார் சைக்கிள் வீதியை விட்டு விலகிக் கவிழ்ந்ததில், அவர் உயிரிழந்தார். அவருடன் பயணித்திருந்த ஒருவர் காயமடைந்து சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மாவத்தகம பகுதியில், கண்டி–குருநாகல் பிரதான வீதியைக் கடக்க முயன்ற 67 வயதுடைய பாதசாரி ஒருவர் மோட்டார் சைக்கிள் மோதியதில் உயிரிழந்தார். இந்த விபத்தில் மோட்டார் சைக்கிள் ஓட்டுநரும், பின்னால் பயணித்தவரும் காயமடைந்துள்ளனர்.

மஹவ பகுதியில், குறுக்கு வீதியிலிருந்து பிரதான வீதிக்குள் நுழைந்த கார் ஒன்றுடன் மோட்டார் சைக்கிள் மோதியதில், 65 வயது மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் உயிரிழந்தார். சம்பவம் தொடர்பில் காரை ஓட்டிய சாரதி, பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

ADVERTISEMENT
ADVERTISEMENT

இந்த நான்கு உயிரிழப்பு சம்பவங்கள் தொடர்பிலும் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

எங்களின் சமீபத்திய செய்திகள், நிகழ்நேர முக்கிய செய்திகள் உடனுக்குடன் தெரிந்துகொள்ளுங்கள்.

ADVERTISEMENT
ADVERTISEMENT