100 நாட்களை கடந்த செம்மணி அகழ்வுப் பணிகள்: 515 மனித எலும்புக்கூடுகள் அடையாளம்!

செம்மணி மனிதப் புதைகுழியில் இதுவரை இடம்பெற்றுள்ள 101 நாட்கள் அகழ்வுப் பணிகளின் போது, மொத்தமாக 515 மனித எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. 
100 நாட்களை கடந்த செம்மணி அகழ்வுப் பணிகள்: 515 மனித எலும்புக்கூடுகள் அடையாளம்!
- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -

யாழ்ப்பாணம், செம்மணி மனிதப் புதைகுழியில் முன்னெடுக்கப்பட்டு வரும் அகழ்வுப் பணிகள் 100 நாட்களைக் கடந்து, நேற்று (08) 101ஆவது நாளாகவும் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டுள்ளன.

செம்மணி மனிதப் புதைகுழியில் இதுவரை இடம்பெற்றுள்ள 101 நாட்கள் அகழ்வுப் பணிகளின் போது, மொத்தமாக 515 மனித எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. 

- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -

அவற்றில் 506 மனித எலும்புக்கூடுகள் முழுமையாக அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளன. மேலும், எஞ்சியுள்ள எலும்புக்கூடுகளை அகழ்ந்தெடுக்கும் பணிகளும் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

செம்மணி மனிதப் புதைகுழியில் தற்போது முன்னெடுக்கப்பட்டு வரும் மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகளை 56 நாட்களுக்கு மேற்கொள்ள நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

இதன்படி, மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகளின் 47ஆவது நாளான நேற்று மேலும் 8 மனித எலும்புக்கூடுகள் புதிதாக அடையாளம் காணப்பட்டுள்ளன. அதேவேளை, ஏற்கெனவே அடையாளம் காணப்பட்டிருந்த 5 மனித எலும்புக்கூடுகள் அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளன.

இதனிடையே, செம்மணி மனிதப் புதைகுழி பகுதியில் எழுமாறாக தோண்டப்பட்ட இரண்டு சோதனைக் குழிகளில், ஒரு சோதனைக் குழியிலிருந்து மனித எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அகழ்வுப் பணிகள் தொடர்ந்து இடம்பெற்று வரும் நிலையில், இதுவரை அடையாளம் காணப்பட்ட மனித எலும்புக்கூடுகளின் எண்ணிக்கை 515ஆக அதிகரித்துள்ளது.

செம்மணி மனிதப் புதைகுழியில் இருந்து தொடர்ச்சியாக மனித எலும்புக்கூடுகள் கண்டெடுக்கப்பட்டு வரும் நிலையில், அகழ்வுப் பணிகளின் அடுத்தகட்ட நடவடிக்கைகள் மற்றும் நீதிமன்றத்தின் அனுமதிக்குட்பட்ட காலப்பகுதியில் மேற்கொள்ளப்படவுள்ள பணிகள் தொடர்பில் தொடர்ந்து அவதானம் செலுத்தப்பட்டு வருகின்றது.

கூகுளில் நியூஸ்21ஐ பின்தொடரவும்

கூகுள் செய்திகளில் எங்களின் முக்கியச் செய்திகளை உடனுக்குடன் பெற கிளிக் செய்யவும்.

சமூக வலைத்தளங்களில் பின்தொடர