தொடர் வேலை நிறுத்தத்தில் ஈடுபடவுள்ள அரச வைத்திய அதிகாரிகள்
நாளை (24) முதல் தொடர்ச்சியான பணிப்புறக்கணிப்பு போராட்டத்தை ஆரம்பிக்க அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் தீர்மானித்துள்ளது.
முன்னதாக தெரிவித்ததை போன்று ஜனவரி மாதம் முதல் DAT கொடுப்பனவை வழங்குவதில்லை என அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் இந்த முடிவை எடுத்துள்ளதாக சங்கம் தெரிவித்துள்ளது.
