ஓய்வூதியம் பெறுவோருக்கு மாதாந்தம் 3000 ரூபாய் உதவித்தொகை
அரச சேவையின் ஓய்வூதியதாரர்களுக்காக 3000 ரூபாய் விசேட மாதாந்த கொடுப்பனவு வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
நேற்று (24) நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் இதற்கான அங்கீகாரம் வழங்கப்பட்டதாக அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்தார்.

அதன்படி சம்பள முரண்பாடுகள் நிவர்த்தி செய்யப்படும் வரை 2024 செப்டெம்பர் மாதம் முதல் இந்த விசேட மாதாந்த கொடுப்பனவு வழங்கப்படவுள்ளது.
சுமார் 7 இலட்சம் பேர் இதனால் பலன் பெறுவார்கள் என அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
