இலங்கையிலிருந்து புறப்பட்ட 240 ஈரானிய கடற்படை வீரர்கள்
இலங்கையை அண்மித்த கடற்பரப்பில் கடந்த மாதம் நடந்த விபத்தைத் தொடர்ந்து இலங்கையின் பாதுகாப்பில் இருந்த 240 பேரை ஈரான் திரும்பப் பெற்றுக்கொண்டது.
ஐரிஸ் தேனா கப்பலில் உயிர் பிழைத்தவர்கள் மற்றும் ஐரிஸ் புஷேர் கப்பலின் பணியாளர்கள் உட்பட, இந்த குழுவினர் ஒரு சிறப்பு விமானத்தில் நாடு திரும்புவதற்கு இலங்கை அதிகாரிகள் ஏற்பாடு செய்தனர்.
அமெரிக்க-ஈரான் மோதலின் போது, இலங்கைக் கடற்கரையில் ஐரிஸ் தேனா கப்பல் தாக்குதலுக்கு உள்ளாகி மூழ்கிய சில வாரங்களுக்குப் பிறகு இந்தத் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இந்த விபத்தில் 32 பேர் மீட்கப்பட்ட நிலையில், டஜன் கணக்கானோர் உயிரிழந்தனர்.
சர்வதேச கடல்சார் கடமைகளைப் பின்பற்றி, மனிதாபிமான அடிப்படையில் 200-க்கும் மேற்பட்ட ஈரானிய கடற்படை வீரர்களுக்கு இலங்கை அடைக்கலம் கொடுத்திருந்தது.
பின்னர், அவர்களை ஈரானுக்குத் திருப்பி அனுப்புவதற்கான ஏற்பாடுகளைச் செய்தமை குறிப்பிடத்தக்கது.
