கொத்து ரொட்டி சாப்பிட முன்று லட்சம்... காதலியுடனும் வந்த சிறுவன்!

காலி பேருந்து நிலையத்திற்கு அருகில் இருந்த போது இருவரையும் அவதானித்து சந்தேகமடைந்து பொலிஸார் விசாரணை நடத்தியுள்ளனர்.
கொத்து ரொட்டி சாப்பிட முன்று லட்சம்... காதலியுடனும் வந்த சிறுவன்!
- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -

முன்று லட்சம் பணத்துடனும் 14 வயது காதலியுடனும் கொத்து ரொட்டி சாப்பிட வந்த 17 இளைஞர் பொலிஸாரிடம் பிடிபட்டுள்ள சம்பவம் காலியில் இடம்பெற்றுள்ளது.

காலி பேருந்து நிலையத்திற்கு அருகில் இருந்த போது இருவரையும் அவதானித்து சந்தேகமடைந்து பொலிஸார் விசாரணை நடத்தியுள்ளனர்.

- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -

இதன்போது இளைஞன் தந்தையிடமிருந்து மூன்று இலட்சம் ரூபாவிற்கும் அதிகமான பணத்தை திருடி வந்துள்ளாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அத்துடன் குறித்த இளைஞனும் , பதின்மவயது சிறுமியும் பாதுக்க பிரதேசத்தில் வசிப்பவர்கள் எனவும், ரோந்து சென்ற பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அத்துடன் கொத்து ரொட்டி சாப்பிடும் ஆசையின் காரணமாக குறித்த நபர் காதலியான 14 வயது சிறுமியை அழைத்து காலிக்கு வந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -

இதனையடுத்து இருவரும் நேற்று மாலை கராப்பிட்டிய வைத்தியசாலையில் சட்ட வைத்தியரிடம் ஆஜர்படுத்தப்பட்டு காலி நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளனர்.

கூகுளில் நியூஸ்21ஐ பின்தொடரவும்

கூகுள் செய்திகளில் எங்களின் முக்கியச் செய்திகளை உடனுக்குடன் பெற கிளிக் செய்யவும்.

சமூக வலைத்தளங்களில் பின்தொடர
- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -