எல்லை மீறி மீன்பிடித்த குற்றச்சாட்டில் 11 இந்திய மீனவர்கள் கைது
நெடுந்தீவு கடற்கரையில் எல்லை மீறி மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட 11 இந்திய மீனவர்கள், ஒரு படகுடன் கடற்படையினரால் கைது செய்யப்பட்டதாக தமிழக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
கைது செய்யப்பட்ட மீனவர்கள் மயிலிட்டி மீன்வளத் துறைமுகத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
கைது செய்யப்பட்ட மீனவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மேலும் தெரிவிக்கப்படுகிறது.
