போக்குவரத்து சபைக்கு இணைக்கப்படவுள்ள 800 புதிய சாரதிகள்
800 சாரதிகளையும் 275 நடத்துனர்களையும் இணைத்துக் கொள்ள இலங்கை போக்குவரத்து சபை நடவடிக்கை எடுத்துள்ளது.

800 சாரதிகளையும் 275 நடத்துனர்களையும் இணைத்துக் கொள்ள இலங்கை போக்குவரத்து சபை நடவடிக்கை எடுத்துள்ளது.
இலங்கை போக்குவரத்து சபையில் தற்போது 1,035 சாரதி வெற்றிடங்கள் காணப்படுவதாக அதன் தலைவர் லலித் டி அல்விஸ் தெரிவித்தார்.
அத்துடன், 450 நடத்துனர் பற்றாக்குறை உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இந்த புதிய ஆட்சேர்ப்புகள் வருடாந்தம் ஓய்வு பெறும் ஊழியர்களின் எண்ணிக்கை அடிப்படையில் மேற்கொள்ளப்படுகின்றன.