பல பகுதிகளில் இன்று மழையுடன் கூடிய காலநிலை

கிழக்கு மாகாணத்திலும் பொலன்னறுவை மாவட்டத்திலும் பல இடங்களில் மழை பெய்யும் என திணைக்களத்தின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.

ஜனவரி 16, 2023 - 16:54
பல பகுதிகளில் இன்று மழையுடன் கூடிய காலநிலை

தென், சப்ரகமுவ, ஊவா, மேல், மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களில் இன்று (16) மாலை அல்லது இரவு வேளையில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

தென், சப்ரகமுவ மற்றும் ஊவா மாகாணங்களிலும் களுத்துறை மாவட்டத்தின் சில இடங்களிலும் 75 மில்லிமீற்றருக்கும் அதிகமான பலத்த மழை பெய்யக்கூடும் என திணைக்களம் தெரிவித்துள்ளது.

கிழக்கு மாகாணத்திலும் பொலன்னறுவை மாவட்டத்திலும் பல இடங்களில் மழை பெய்யும் என திணைக்களத்தின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.

இடியுடன் கூடிய மழையுடன் கூடிய மின்னல் விபத்துக்கள் மற்றும் தற்காலிக பலத்த காற்றும் ஏற்படக்கூடும் என்பதால் விபத்துக்களை குறைப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.

Listen Live on Aha FM Your Favorite Online Tamil Radio!