கிளிநொச்சியில் பஸ் விபத்து: 23 பேருக்கு காயம்

விபத்தில் காயமடைந்தவர்கள் கிளிநொச்சி பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

டிசம்பர் 5, 2022 - 18:00
கிளிநொச்சியில் பஸ் விபத்து: 23 பேருக்கு காயம்

கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் சென்ற அதி சொகுசு பஸ் ஒன்று கிளிநொச்சி பகுதியில் இன்று (5) அதிகாலை விபத்துக்குள்ளானதில் 23 பேர் காயமடைந்துள்ளனர்.

கிளிநொச்சி 155 ஆம் கட்டை பகுதியில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. வீதியில் இருந்த மாடுகளுடன் குறித்த பஸ் மோதியதில் இந்த விபத்து நேர்ந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

விபத்தில் காயமடைந்தவர்கள் கிளிநொச்சி பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். 

Listen Live on Aha FM Your Favorite Online Tamil Radio!