வெள்ளத்தில் சிக்கியவர்கள் ஹெலிகாப்டர்கள் மூலம் மீட்பு..!

பிரேசிலின் சாண்டா கேடரினா மாகாணத்தில் வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ராணுவ ஹெலிகாப்டர்கள் ஈடுபட்டுள்ளன.

டிசம்பர் 2, 2022 - 15:48
வெள்ளத்தில் சிக்கியவர்கள் ஹெலிகாப்டர்கள் மூலம் மீட்பு..!

பிரேசிலின் சாண்டா கேடரினா மாகாணத்தில் வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ராணுவ ஹெலிகாப்டர்கள் ஈடுபட்டுள்ளன.

அம்மாகாணத்தில் இடைவிடாமல் கொட்டித் தீர்த்த கனமழையால் 17 நகரங்களில் அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. ஏராளமான வீடுகளை வெள்ளம் சூழ்ந்து பொதுமக்கள் தத்தளித்து வருகின்றனர்.

தொடர் மழை பெய்த வண்ணமாக இருப்பதால், மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. வெள்ளம் பாதித்த பகுதியில் வீட்டின் மேல்தளத்தில் சிக்கித் தவித்தவர்கள் ஹெலிகாப்டர் மூலம் பத்திரமாக மீட்கப்பட்டனர். 

Listen Live on Aha FM Your Favorite Online Tamil Radio!