இந்திய வெளிவிவகார அமைச்சருடன் மிலிந்த மொரகொட சந்திப்பு
குறித்த சந்திப்பில் இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான உறவுகளின் தற்போதைய நிலை தொடர்பில் ஆய்வு செய்யப்பட்டுள்ளது.

இந்தியாவிற்கான இலங்கை உயர்ஸ்தானிகர் மிலிந்த மொரகொட இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ். ஜெய்சங்கரை நேற்று புதுடில்லியில் உள்ள வெளிவிவகார அமைச்சில் சந்தித்துள்ளார்.
குறித்த சந்திப்பில் இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான உறவுகளின் தற்போதைய நிலை தொடர்பில் ஆய்வு செய்யப்பட்டுள்ளது.
மேலும் , இந்தியாவின் வெளிவிவகார அமைச்சர் மற்றும் இலங்கை உயர்ஸ்தானிகர் ஆகியோர், ஜெய்சங்கரின் அண்மைய இலங்கை பயணத்தின் பின் மேற்கொள்ளவுள்ள நடவடிக்கைகள் குறித்தும் கலந்துரையாடியுள்ளனர்