தற்காலிகமாக மூடப்படும் யால தேசிய பூங்கா

மழையுடனான காலநிலை குறையும் வரை யால தேசிய பூங்காவை மூடுவதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மார்ச் 1, 2025 - 18:02
தற்காலிகமாக மூடப்படும் யால தேசிய பூங்கா

மழையுடனான காலநிலை குறையும் வரை யால தேசிய பூங்காவை மூடுவதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இரண்டு நாட்களாக பெய்து வரும் மழை காரணமாக, யால தேசிய பூங்காவில் உள்ள பல வீதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதாகவும், பூங்காவிற்குள் உள்ள பல ஏரி கரைகள் இடிந்து விழுந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இதன் காரணமாக, வனவிலங்குகள் மற்றும் சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு, மழை பெய்யும் சூழ்நிலை குறையும் வரை, யால தேசிய பூங்காவை இன்று (01) முதல் மூடுவதற்கு தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

Listen Live on Aha FM Your Favorite Online Tamil Radio!