பிறந்த நாளிலேயே விபத்தில் உயிரிழந்த யாழ். இளைஞன்

யாழ்ப்பாணம் - அராலி, வல்லை வீதியில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் இளைஞன் உயிரிழந்துள்ளதுடன், மற்றுமொருவர் காயமடைந்துள்ளார்.

ஏப்ரல் 26, 2022 - 14:48
ஏப்ரல் 26, 2022 - 14:49
பிறந்த நாளிலேயே விபத்தில் உயிரிழந்த யாழ். இளைஞன்

யாழ்ப்பாணம் - அராலி, வல்லை வீதியில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் இளைஞன் உயிரிழந்துள்ளதுடன், மற்றுமொருவர் காயமடைந்துள்ளார்.

குறித்த மோட்டார் சைக்கிள் வேகக் கட்டுப்பாட்டை இழந்து நேற்று விபத்துக்கு உள்ளானது. 

அராலி - வல்லை வீதியில், தெல்லிப்பழை அம்பனை சந்திக்கு அருகில் மோட்டார் சைக்கிள் வேக கட்டுப்பாட்டை இழந்து வீதியோரமாக இருந்த வேலி தூணுடன் மோதி விபத்துக்குள்ளானது. 

அதில் பயணிந்த யாழ்ப்பாணம் மாவிட்டபுரம் பகுதியை சேர்ந்த 22 வயது இளைஞன் உயிரிழந்துள்ளார். 

அவருடன் பயணித்த 20 வயது இளைஞன் படுகாயமடைந்த நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

உயிரிழந்த இளைஞனின் பிறந்தநாள் நேற்றைய தினமாகும். 

Listen Live on Aha FM Your Favorite Online Tamil Radio!