யாழ்ப்பாணத்துக்கு விமானம் மூலம் வரும் சுற்றுலா பயணிகள்

யாழ்ப்பாணத்துக்கு விமானம் மூலம் சுற்றுலா பயணிகளை  அழைத்து வர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

டிசம்பர் 12, 2022 - 20:11
யாழ்ப்பாணத்துக்கு விமானம் மூலம் வரும் சுற்றுலா பயணிகள்

யாழ்ப்பாணத்துக்கு விமானம் மூலம் சுற்றுலா பயணிகளை  அழைத்து வர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

வடக்கு மாகாணத்தில் உள்ள ரயில் பாதைகள் திருத்தப் பணிகளுக்காக மூடப்படுவதால் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபையின் தலைவர் தெரிவித்துள்ளார்.

வடக்கில் ரயில் பாதைகள் சுமார் 06 மாதங்களுக்கு திருத்தம் செய்யப்பட உள்ளதால் யாழ். குடா நாட்டிற்கு வரும் சுற்றலா பயணிகளுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.

தற்போது நாட்டில் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்துள்ளதுடன், வருகின்ற ஆண்டும் அதிகளவான சுற்றுலா பயணிகள் எதிர்பார்க்கப்படுகின்றனர்.

இதனால் யாழ்ப்பாணத்திற்கு வரும் சுற்றலா பயணிகளின் எண்ணிக்கையும் அதிகரிக்கலாம், எனவே புகையிரதங்கள் மட்டுப்படுத்தப்பட்டால், பயணிகள் பாதிக்கப்படுவார்கள்.

ஆகவே சுற்றுலா பயணிகளை விமானம் மூலம் அழைத்து வருவற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபையின் தலைவர் பிரியந்த பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

Listen Live on Aha FM Your Favorite Online Tamil Radio!