மகளின் தகராறில் தலையிட்ட தந்தை கொலை

குறித்த நபர் மற்றும் மகள் ஆகியோருக்கு இடையிலான தகறாரின் போது. அதனை தடுக்க சென்ற தந்தை குறித்த நபரால் தடியால் தாக்கப்பட்டுள்ளார்.

செப்டெம்பர் 29, 2023 - 11:35
மகளின் தகராறில் தலையிட்ட தந்தை கொலை

மினுவாங்கொட அளுதபொல பிரதேசத்தில் நபர் ஒருவர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் பொலிஸ் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

இந்தக் கொலைச் சம்பவம் நேற்று (28) காலை இடம்பெற்றுள்ளது.

சம்பவத்தில் 74 வயதுடைய நபர் உயிரிழந்துள்ளார்.

இறந்தவரின் மகள் முதல் திருமணத்திலிருந்து பிரிந்து வேறொரு நபருடன் வசித்து வருகிறார்.

இந்த நிலையில் குறித்த நபர் மற்றும் மகள் ஆகியோருக்கு இடையிலான தகறாரின் போது. அதனை தடுக்க சென்ற தந்தை குறித்த நபரால் தடியால் தாக்கப்பட்டுள்ளார்.

சம்பவத்தில் படுகாயமடைந்த தந்தை கம்பஹா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.

Listen Live on Aha FM Your Favorite Online Tamil Radio!