தமிழகத்தில் மேலும் 4 நாட்களுக்கு கனமழை... வானிலை ஆய்வு மையம் தகவல்!

அடுத்த 24 மணி நேரத்திற்குள் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும்

நவம்பர் 30, 2023 - 15:07
தமிழகத்தில் மேலும் 4 நாட்களுக்கு கனமழை... வானிலை ஆய்வு மையம் தகவல்!

தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் நிலவி வந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி, தொடர்ந்து வலுப்பெற்று தீவிர காற்றழுத்த தாழ்வுப்பகுதியாக அதே பகுதியில் நிலவி வருகிறது.

இது மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து அடுத்த 24 மணி நேரத்திற்குள் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க: அமெரிக்காவின் அழைப்பை நிராகரித்த வடகொரியா ஜனாதிபதியின் சகோதரி

அதன் பின்னர் வடமேற்கு திசையில் நகர்ந்து தென் மேற்கு வங்கக்கடல் பகுதியில் புயலாக வலுப்பெறக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக, அடுத்து வரும் 4 தினங்களுக்கு (இன்று முதல் 3-ந் தேதி வரை) தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்காலில் அனேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Listen Live on Aha FM Your Favorite Online Tamil Radio!