லொறி மோதிய விபத்தில் 5 பேர் பலி
கடலூர் அருகே வேப்பூர் தேசிய நெடுஞ்சாலையில் அடுத்தடுத்து 2 தனியார் பேருந்துகள், 2 லொறிகள் ஒரு கார் மீது மோதி விபத்து ஏற்பட்டது.

கடலூர் அருகே வேப்பூர் தேசிய நெடுஞ்சாலையில் அடுத்தடுத்து 2 தனியார் பேருந்துகள், 2 லொறிகள் ஒரு கார் மீது மோதி விபத்து ஏற்பட்டது.
இந்த விபத்தில் காரில் சென்ற 2 பெண்கள், 2 சிறார்கள் உள்பட 5 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.
காரில் சிக்கிய உடல்களை நீண்ட போராட்டத்துக்கு பிறகு தீயணைப்பு படையினர் மீட்டனர். விபத்து குறித்து பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.