லொறி மோதிய விபத்தில் 5 பேர் பலி

கடலூர் அருகே வேப்பூர் தேசிய நெடுஞ்சாலையில் அடுத்தடுத்து 2 தனியார் பேருந்துகள், 2 லொறிகள் ஒரு கார் மீது மோதி விபத்து ஏற்பட்டது.

Jan 3, 2023 - 10:24
லொறி மோதிய விபத்தில் 5 பேர் பலி

கடலூர் அருகே வேப்பூர் தேசிய நெடுஞ்சாலையில் அடுத்தடுத்து 2 தனியார் பேருந்துகள், 2 லொறிகள் ஒரு கார் மீது மோதி விபத்து ஏற்பட்டது.

இந்த விபத்தில் காரில் சென்ற 2 பெண்கள், 2 சிறார்கள் உள்பட 5 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

காரில் சிக்கிய உடல்களை நீண்ட போராட்டத்துக்கு பிறகு தீயணைப்பு படையினர் மீட்டனர். விபத்து குறித்து பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

பிற சமூக ஊடக தளங்களில் எங்களுடன் இணைந்திருங்கள்