நாளை முதல் வானிலையில் ஏற்படவுள்ள திடீர் மாற்றம்

நாளை (11) முதல் நாட்டில் தற்காலிகமாக மழை நிலைமை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஏப்ரல் 10, 2024 - 10:42
நாளை முதல் வானிலையில் ஏற்படவுள்ள திடீர் மாற்றம்

நாளை (11) முதல் நாட்டில் தற்காலிகமாக மழை நிலைமை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கிழக்கு மாகாணம் மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களில் பல தடவைகள் மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.

மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பிற்பகல் 2 மணிக்குப் பின்னர் சில இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும்.

மேல், மத்திய மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் காலை வேளையில் பனிமூட்டமான நிலை எதிர்பார்க்கப்படுகின்றது.

இடியுடன் கூடிய மழையுடன் கூடிய தற்காலிக பலத்த காற்று மற்றும் மின்னலினால் ஏற்படக்கூடிய ஆபத்தை குறைப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு மக்கள் அன்புடன் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

இன்று (10) மதியம் 12.11 மணியளவில் தம்புத்தேகம, மெதிரிகிரிய, மேல் புளியங்குளம், ராஜாங்கனை, எப்பாவல, வாகரை ஆகிய பிரதேசங்களில் சூரியன் உச்சம் கொடுக்கும்.

Listen Live on Aha FM Your Favorite Online Tamil Radio!