நாட்டின் பல பகுதிகளில் இன்றும் மழை; அறிவிப்பு வெளியானது

வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் இது தெரியவந்துள்ளது.

ஜுன் 28, 2024 - 12:53
நாட்டின் பல பகுதிகளில் இன்றும் மழை; அறிவிப்பு வெளியானது

மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் இன்று (28) மழை பெய்யக்கூடும்.

வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் இது தெரியவந்துள்ளது.

ஊவா மாகாணம் மற்றும் அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களில் மாலை அல்லது இரவு வேளைகளில் சில இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.

மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுகளிலும், வடக்கு, வடமத்திய மற்றும் வடமேற்கு மாகாணங்களிலும் திருகோணமலை, ஹம்பாந்தோட்டை மற்றும் மொனராகலை மாவட்டங்களிலும் கி.மீ. 40 முதல் 50 வரை பலத்த காற்றும் வீசும்.

Listen Live on Aha FM Your Favorite Online Tamil Radio!