மாணவர்களை பாடசாலை அனுப்புவது குறித்து வெளியான எச்சரிக்கை!
நாட்டில் நிலவும் தொடர் மழையினால் சிறுவர்களுக்கு வைரஸ் பாதிப்பு அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

நாட்டில் நிலவும் தொடர் மழையினால் சிறுவர்களுக்கு வைரஸ் பாதிப்பு அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதனை, கொழும்பு லேடி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் விசேட வைத்திய நிபுணர் டொக்டர் தீபால் பெரேரா தெரிவித்துள்ளார்.
தற்போது, இருமல், சளி, காய்ச்சல் போன்றவற்றுடன் ஹெபடைடிஸ் நோய் குழந்தைகளையும் பாதிக்கின்றது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அத்துடன், முறையான வைத்திய சிகிச்சைகளை பெற்றுக்கொள்வதன் மூலம் குழந்தைகளை இந்நிலையிலிருந்து பாதுகாக்க முடியும் என டாக்டர் தீபால் பெரேரா தெரிவித்துள்ளார்.
எனவே, இருமல் மற்றும் சளி போன்ற அறிகுறிகள் இருந்தால் பிள்ளைகளை பாடசாலைக்கு அனுப்ப வேண்டாம் எனவும் பெற்றோர்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.