நீண்ட நாட்களாக காய்ச்சல் காணப்பட்டால் அரச வைத்தியசாலைக்கு சென்று வைத்திய ஆலோசனைகளை பெற்றுக்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
நாட்டில் தற்போது டெங்கு நோய் மற்றும் இன்புளுவன்சா வைரஸின் ஏ மற்றும் பி வகைகள் பரவி வருவதாக சுகாதார திணைக்களம் தெரிவித்துள்ளது.
நாட்டில் நிலவும் தொடர் மழையினால் சிறுவர்களுக்கு வைரஸ் பாதிப்பு அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இலங்கையின் பல பகுதிகளில் கண் நோய் பரவி வருவதாகவும் எனினும், இது தொடர்பில் மக்களை தேவையற்ற அச்சம் கொள்ள வேண்டாம் என சுகாதார திணைக்களம் தெரிவித்துள்ளது.