பிரித்தானிய இளவரசர் ஆண்ட்ரூவின் கடவுச்சீட்டு பறிமுதல் செய்யப்படலாம் – நிபுணரின் அதிர்ச்சி கருத்து

பிரித்தானிய அரச குடும்பத்திற்கு மிகப்பெரிய அவமானம் ஏற்படுத்தியுள்ளதாக கூறப்படும் இளவரசர் ஆண்ட்ரூ மவுண்ட்பேட்டன்-வின்ட்சரின் கடவுச்சீட்டை பறிமுதல் செய்ய வேண்டிய நிலை உருவாகலாம் என்று அரச குடும்ப விவகார நிபுணர் ஒருவர் எச்சரித்துள்ளார்.
பிரித்தானிய இளவரசர் ஆண்ட்ரூவின் கடவுச்சீட்டு பறிமுதல் செய்யப்படலாம் – நிபுணரின் அதிர்ச்சி கருத்து
- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -

பிரித்தானிய அரச குடும்பத்திற்கு மிகப்பெரிய அவமானம் ஏற்படுத்தியுள்ளதாக கூறப்படும் இளவரசர் ஆண்ட்ரூ மவுண்ட்பேட்டன்-வின்ட்சரின் கடவுச்சீட்டை பறிமுதல் செய்ய வேண்டிய நிலை உருவாகலாம் என்று அரச குடும்ப விவகார நிபுணர் ஒருவர் எச்சரித்துள்ளார்.

அபுதாபி அரச குடும்பத்துக்கு சொந்தமான, 10 மில்லியன் பவுண்ட் மதிப்புள்ள சொகுசு கடற்கரை மாளிகையில் ஆண்ட்ரூ குடியேற திட்டமிட்டுள்ளதாகவும், பிரித்தானிய ஊடகங்களின் கவனத்திலிருந்து விலகப் பொருட்படுத்தி வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -

இதே சமயம், ஆண்ட்ரும் அவரது முன்னாள் மனைவி சாராவும் தொடர்புடைய ஊழல் விவகாரங்களை வெளிச்சத்துக்கு கொண்டுவந்த எழுத்தாளர் ஆண்ட்ரூ லோனி, இளவரசர் ஆண்ட்ரூ பிரித்தானியாவை விட்டு வெளியேற அனுமதிக்கப்படக்கூடாது என்று வலியுறுத்துகிறார்.

ஆண்ட்ரூ  நாட்டை விட்டு தப்பிச் செல்லாதபடி அவரது கடவுச்சீட்டை உடனடியாக பறிமுதல் செய்ய வேண்டும் என்றும் கோரிக்கை வைத்துள்ளார்.

எப்ஸ்டீன் தொடர்பான விசாரணை பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும்

ஜெஃப்ரி எப்ஸ்டீன் விவகாரத்தில், ஆண்ட்ரூவிற்கு எதிராக இன்னும் பல தகவல்கள் வெளிவரும் வாய்ப்பு இருப்பதாகவும், அந்த வழக்கில் அவர் தீவிரமாக ஈடுபட்டார் என்பதில் ஐயமில்லை என்றும் லோனி தெரிவித்துள்ளார்.

- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -

இந்த வழக்கில் அவர் கண்டிப்பாக விசாரணைக்கு உட்படுத்தப்பட வேண்டும் என்றும், அதற்காகவே அவரது பயணச் சுதந்திரத்தை கட்டுப்படுத்த வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.

அபுதாபியின் ஜனாதிபதி ஷேக் முகமது பின் சயீத் அல் நஹ்யான் ஆண்ட்ரூவிற்கு அந்த சொகுசு மாளிகையை பயன்படுத்த அனுமதி வழங்கியுள்ளார்.

6 படுக்கையறைகள் கொண்ட இந்த மாளிகை, இரண்டாம் எலிசபெத் ராணியின் மரணத்துக்குப் பிறகு புதுப்பிக்கப்பட்டு, தற்போது ஆண்ட்ரூவுக்காக ஒதுக்கப்பட்டுள்ளது.

இதனால், இனி அவர் பிரித்தானியா மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய இரு நாடுகளுக்கும் இடையில் தனது நேரத்தை பகிர்ந்து கொள்ளக்கூடும் என்பதும் கூறப்படுகிறது.

ஆண்ட்ரூவும் அவரது இரு மகள்களும் இதற்கு முன்பும் அபுதாபியில் உள்ள அதே மாளிகையில் தங்கியிருக்கிறார்கள். ஷேக் முகமது மற்றும் ஆண்ட்ரூ இடையே நீண்டகால நட்புறவு இருப்பதும் குறிப்பிடப்படுகிறது.

கூகுளில் நியூஸ்21ஐ பின்தொடரவும்

கூகுள் செய்திகளில் எங்களின் முக்கியச் செய்திகளை உடனுக்குடன் பெற கிளிக் செய்யவும்.

சமூக வலைத்தளங்களில் பின்தொடர
- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -