சிறுமி பாலியல் வன்புணர்வு ; பொலிஸ் உத்தியோகத்தர் கைது

சிறுமியை பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தி, அதனை காணொளி பதிவுகளாக எடுத்து  மிரட்டி கடந்த இரண்டு வருட காலமாக வன்புணர்ந்து வந்துள்ளார்.

ஜனவரி 4, 2023 - 16:46
சிறுமி பாலியல் வன்புணர்வு ; பொலிஸ் உத்தியோகத்தர் கைது

யாழ் பருத்தித்துறை பகுதியில் 17 வயதான சிறுமியை 2 வருட காலமாக தொடர்ச்சியாக பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்திய சந்தேகத்தில் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் நேற்று (03) கைது செய்யப்பட்டுள்ளார்.

சிறுமியை பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தி, அதனை காணொளி பதிவுகளாக எடுத்து  மிரட்டி கடந்த இரண்டு வருட காலமாக வன்புணர்ந்து வந்துள்ளார்.

இந்த நிலையில், கடந்த வாரம் சுகயீனமடைந்த வைத்தியசாலையில் சிறுமி அனுமதிக்கப்பட்டார்.

இந்நிலையில், மருத்துவ சிகிச்சையின் போது, பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டு வந்தமை கண்டறியப்பட்டது.

அவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போது, பொலிஸ் உத்தியோகத்தர் தொடர்ச்சியாக பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தி வந்தமை தெரியவந்துள்ளது.

விசாரணைகளை முன்னெடுத்து வந்த பருத்தித்துறை பொலிஸார் குறித்த பொலிஸ் உத்தியோகத்தரை கைது செய்தனர்.

Listen Live on Aha FM Your Favorite Online Tamil Radio!