இன்று பல பிரதேசங்களில் 100 மில்லிமீற்றருக்கும் அதிக மழை 

மேற்கு மற்றும் தென் மாகாணங்களில் காலை வேளையிலும் மழை பெய்யும்.

மே 14, 2024 - 10:50
இன்று பல பிரதேசங்களில் 100 மில்லிமீற்றருக்கும் அதிக மழை 

வளிமண்டலவியல் திணைக்களத்தின் தகவல்களின்படி, இலங்கைக்கு அருகிலுள்ள தாழ்வான வளிமண்டலத்தில் ஒரு கொந்தளிப்பான தன்மை உருவாகி வருவதால், நாடு முழுவதும் மழை நிலை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பல மாகாணங்களில் இன்று (14) பிற்பகல் சுமார் 1.00 மணிக்குப் பிறகு பரவலாக மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.

தெற்கு, மத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களில் சில இடங்களில் 100 மில்லிமீற்றருக்கும் அதிகமான மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

மேற்கு மற்றும் தென் மாகாணங்களில் காலை வேளையிலும் மழை பெய்யும்.

இடியுடன் கூடிய மழையுடன் கூடிய தற்காலிக பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய ஆபத்துக்களை குறைத்துக்கொள்ள தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

Listen Live on Aha FM Your Favorite Online Tamil Radio!