நாட்டின் பல பகுதிகளில் இன்று மழையற்ற வானிலை
சில இடங்களில் காலை வேளையில் பனிமூட்டமான நிலை காணப்படலாம் என அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் இன்று (24) மழையற்ற காலநிலை நிலவும் என வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும், ஊவா மாகாணத்திலும் ஹம்பாந்தோட்டை, இரத்தினபுரி மற்றும் அம்பாறை மாவட்டங்களிலும் சில இடங்களில் மாலை அல்லது இரவு வேளையில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடும்.
அத்துடன், மேல், சப்ரகமுவ, மத்திய, தெற்கு, வடமேற்கு மற்றும் ஊவா மாகாணங்களில் சில இடங்களில் காலை வேளையில் பனிமூட்டமான நிலை காணப்படலாம் என அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.