தனியார் பேருந்து கவிழ்ந்து ஒருவர் பலி; உயர்தர மாணவர்கள் உட்பட சுமார் 20 பேர் காயம்
விபத்தில் காயமடைந்தவர்கள் தலாவ மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாக தலாவ பொலிஸார் கூறியுள்ளனர்.
அநுராதபுரம், தலாவ ஜெயகங்கா சந்திப்பில் தனியார் பஸ் ஒன்று கவிழ்ந்ததில், ஒருவர் உயிரிழந்துள்ளதாகவும், பாடசாலை மாணவர்கள் உட்பட குறைந்தது 20 பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
விபத்தில் காயமடைந்தவர்கள் தலாவ மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாக தலாவ பொலிஸார் கூறியுள்ளனர்.
காயமடைந்தவர்களில் உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றிய மாணவர்களும் அடங்குவதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.