நாட்டு மக்களுக்கு இன்று இரவு 7.30 மணிக்கு விசேட உரையாற்றவுள்ள ஜனாதிபதி
ஜனாதிபதி இன்று நாட்டு மக்களுக்கு விசேட உரையாற்றவுள்ளாளர்.
இலங்கையின் தற்போதைய நிலைமை குறித்து ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க இன்று (17) இரவு 7.30 மணிக்கு விசேட உரையாற்றவுள்ளதாக அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்தார்.
இன்று பாராளுமன்றத்தில் உரையாற்றிய அமைச்சர் ரத்நாயக்க, வரும் வெள்ளிக்கிழமையும் ஜனாதிபதி பாராளுமன்றத்தில் உரையாற்ற உத்தேசித்துள்ளார் என்றும் குறிப்பிட்டார்.
"ஜனாதிபதி பாராளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை உரையாற்றுவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.அந்த நேரத்தில் எதிர்க்கட்சித் தலைவர்கள் பாராளுமன்றத்தில் இருந்தால், ஜனாதிபதியுடன் ஒரு கலந்துரையாடலுக்கு வழிவகை செய்யப்படும் என்று நாங்கள் நம்புகிறோம். எதிர்க்கட்சித் தலைவர்கள் ஜனாதிபதி மட்டத்தில் தங்கள் கருத்துக்களை முன்வைக்க விரும்பினால், வெள்ளிக்கிழமையன்று அவர்களுக்கு அந்த வாய்ப்பை வழங்க நாங்கள் உத்தேசித்துள்ளோம்," என்று அவர் கூறினார்.
இந்த செய்தி உங்களுக்கு பிடித்திருந்ததா?
News21-ஐ கூகுள் நியூஸில் (Google News) பின்தொடர (Follow) செய்து, உடனுக்குடன் உண்மையான செய்திகளைப் பெறுங்கள்.