அதிகாலையில் இடம்பெற்ற விபத்து! ஒருவர் பலி
விபத்தில் காயமடைந்த இருவரும் வெலிக்கந்த வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

பொலநறுவை- வெலிக்கந்த செவணப்பிட்டிய பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஆண் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் இருவர் காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இன்று(29) அதிகாலை இந்த விபத்தில் உயிரிழந்தவர் தம்பிலுவில் சேர்ந்த வடிவேல் பரமசிங்கம் என அடையாளங்காணப்பட்டுள்ளார்.
விபத்தில் காயமடைந்த இருவரும் வெலிக்கந்த வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். குறித்த விபத்தில் வாகனம் பலத்த சேதமடைந்துள்ளது என தெரிவிக்கப்படுகின்றது.
விபத்து பற்றிய மேலதிக விசாரனையை வெலிக்கந்த பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.