ஈரானுக்காக உளவு பார்த்ததாக சந்தேகம் – கைது செய்யப்பட்ட நால்வரை விசாரிக்க மேலதிக கால அவகாசம்

ஈரானுக்காக உளவு நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட நால்வரை தொடர்ந்து விசாரிக்க பிரிட்டன் பொலிஸாருக்கு மேலதிக கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
ஈரானுக்காக உளவு பார்த்ததாக சந்தேகம் – கைது செய்யப்பட்ட நால்வரை விசாரிக்க மேலதிக கால அவகாசம்

ஈரானுக்காக உளவு நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட நால்வரை தொடர்ந்து விசாரிக்க பிரிட்டன் பொலிஸாருக்கு மேலதிக கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட இந்த நால்வரையும் மார்ச் 13 ஆம் திகதி வரை காவலில் வைத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. 

கைது செய்யப்பட்டவர்களில் ஒருவர் ஈரான் நாட்டைச் சேர்ந்தவர்; மற்ற மூவர் பிரிட்டன்–ஈரான் இரட்டை குடியுரிமை பெற்றவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

22, 40, 52 மற்றும் 55 வயதுடைய இந்த நால்வரும் கடந்த வெள்ளிக்கிழமை அதிகாலை 1 மணியளவில் ஹாரோ, வாட்ஃபோர்டு மற்றும் பார்னெட் பகுதிகளில் உள்ள வீடுகளில் கைது செய்யப்பட்டனர்.

இதனுடன் தொடர்புடையதாக, ஹாரோவில் உள்ள அதே இடத்தில் குற்றவாளிக்கு உதவியதாக சந்தேகித்து 20 முதல் 49 வயதுக்குள் உள்ள ஆறு பேர் கைது செய்யப்பட்டதாக மெட்ரோபாலிடன் பொலிஸார் தெரிவித்தனர்.

அத்துடன், குறித்த நபர்கள் பின்னர் மேலதிக விசாரணை நடைபெறும் வரை பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

மேலும், கைது செய்யப்பட்டவர்களில் ஒருவரை பொலிஸ் அதிகாரியை தாக்கியதாக சந்தேகித்து கூடுதலாக கைது செய்துள்ளதாகவும் பொலிஸார் கூறினர்.

இந்த விசாரணையை இலண்டன் பயங்கரவாத எதிர்ப்பு பிரிவு அதிகாரிகள் முன்னெடுத்து வருவதாக மெட்ரோபாலிடன் பொலிஸார் கூறியுள்ளனர்.

News21 இந்த செய்தி உங்களுக்கு பிடித்திருந்ததா?

News21-ஐ கூகுள் நியூஸில் (Google News) பின்தொடர (Follow) செய்து, உடனுக்குடன் உண்மையான செய்திகளைப் பெறுங்கள்.

Add as a preferred source on Google
சமூக வலைத்தளங்களில் பின்தொடர