நாளை (09) பாடசாலை நடவடிக்கை குறித்து கல்வி அமைச்சு வெளியிட்ட விசேட அறிவிப்பு
ஆசிரியர்கள் நாளை (09) சுகயீன விடுமுறை போராட்டத்தை முன்னெடுப்பதாக அறிவித்துள்ளனர்.

நாட்டில் உள்ள அனைத்து பாடசாலைகளின் கல்வி நடவடிக்கைகளும் வழமை போன்று நாளை (09) இடம்பெறும் என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
சம்பள அதிகரிப்பு உள்ளிட்ட தமது பிரச்சினைக்கு தீர்வு காணுமாறு கோரிக்கை விடுத்து ஆசிரியர்கள் நாளை (09) சுகயீன விடுமுறை போராட்டத்தை முன்னெடுப்பதாக அறிவித்துள்ளனர்.
இந் நிலையில், பாடசாலைகளின் கல்வி நடவடிக்கை நாளை வழமைபோன்று இடம்பெறும் என, கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.