உயர்தர மாணவர்களுக்கான விடுக்கப்பட்டுள்ள விசேட அறிவிப்பு
கல்வி பொதுத்தராதர உயர்தரப் பரீட்சைக்கான விவசாய விஞ்ஞான வினாத்தாளை மீளவும் நடத்துவதற்கான திகதி அறிவிக்கப்பட்டுள்ளது.

கல்வி பொதுத்தராதர உயர்தரப் பரீட்சைக்கான விவசாய விஞ்ஞான வினாத்தாளை மீளவும் நடத்துவதற்கான திகதி அறிவிக்கப்பட்டுள்ளது.
பெப்ரவரி 1ஆம் திகதி விவசாய விஞ்ஞான பரீட்சை மீண்டும் நடைபெறும் என பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.
கடந்த 10ஆம் திகதி நடைபெற்ற விவசாய விஞ்ஞான இரண்டாம் வினாத்தாளுக்குரிய பரீட்சையை பரீட்சைகள் திணைக்களம் இரத்து செய்தது.
விவசாய விஞ்ஞான பாடத்தின் இரண்டாம் வினாத்தாள் முன்னதாக சமூக வலைத்தளங்களில் பரவியதாக தகவல் வெளியானது.
இதனையடுத்து, மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளை அடுத்து பரீட்சையை மீண்டும் நடத்த தீர்மானம் எடுக்கப்பட்டது.
இதன்படி, விவசாய விஞான விஞ்ஞான பரீட்சையின் இரண்டாம் பகுதி பெப்ரவரி 01 ஆம் திகதி, காலை 08.30 முதல் 11.40 வரை நடைபெறும்.
அத்துடன், முதல் பகுதி பிற்பகல் 01.00 மணி முதல் 03.00 மணி வரை நடைபெறும் எனவும் பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.